ஓசூர், செப்.17: பாகலூர் அருகே உள்ள காளஸ்திபுரம் கிராம நிர்வாக அலுவலர் கோவிந்தசாமி. இவர் எலுவப்பள்ளி பகுதியில் ரோந்து சென்ற போது, அங்குள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்த மண்ணை, ஒருவர் லாரியில் ஏற்றிக் கொண்டு இருந்தனர். கோவிந்தசாமி அவர்களிடம் விசாரித்த போது, அவர் அதேபகுதியை சேர்ந்த நஞ்சா ரெட்டி(53) என்பது தெரிய வந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்த அதிகாரி, நஞ்சா ரெட்டியை பாகலூர் போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நஞ்சா ரெட்டியை கைது செய்தனர்.
அரசு புறம்போக்கு நிலத்தில் மண் கடத்தியவர் கைது
previous post