அரியலூர், ஏப்.17: அரியலூர் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர். அரியலூர் அருகே உள்ள கள்ளக்குறிச்சி குறைதீர்க்கும் குமரன் ஆலயம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருளை விற்பனை செய்த குறிச்சி நத்தத்தை சேர்ந்த சாமிநாதன் (50) என்பவரை கயர்லாபாத் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஆனந்தன் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.