பவானி, ஜன.31: அம்மாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் நேற்று நடைபெற்றது. சுகாதார நிலையத்தில் நடைபெற்ற முகாமை அம்மாபேட்டை பேரூராட்சி தலைவர் பாரதி (எ) கே.என்.வெங்கடாசலம் துவக்கி வைத்தார்.
முகாமில், கண் மருத்துவர்கள் ஞானசேகரன், சரண்யா தேவி கொண்ட மருத்துவ குழுவினர் அம்மாபேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 43 பேருக்கு கண் நோய் பரிசோதனை செய்தனர். இதில், 16 பேர் கண் அறுவை சிகிச்சைக்காக ஈரோடு அழைத்து செல்லப்பட்டனர். முகாமில், பேரூராட்சி கவுன்சிலர்கள் ஜவஹரி பேகம், பழனியம்மாள், சுகாதார ஆய்வாளர் வள்ளி குமார், கண் மருத்துவ உதவியாளர் பிரமிளா மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.