தா.பழூர்:பழைய நெல் ரகங்களை மீட்டெடுக்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இந்திய வரைபடம் போல் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்த விலங்கியல் ஆசிரியர் நெல் நடவு செய்துள்ளார். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இடங்கண்ணி கிராமத்தை பூர்வீகமாக கொண்டவர் விலங்கியல் ஆசிரியர் சாமிநாதன். இவர் மீன்சுருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் விலங்கியல் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.