மீரட்: பாஜகவை சேர்ந்த அமைச்சர், எம்பி, எம்எல்ஏ ஆகியோரின் ஐடியாவை தொடர்ந்து கொரோனாவை ஒழிக்க மாட்டு சாணத்தின் புகையை அக்கட்சியை சேர்ந்த தலைவர் ஒருவர் மீரட்டின் வீதிகளில் கிளப்பிவிட்டார். மத்திய பிரதேசத்தை சேர்ந்த பாஜக சர்ச்சை எம்பி பிரக்யா தாக்கூர் கடந்த சில தினங்களுக்கு முன், கொரோனா வைரஸ் தொற்று வராமல் இருக்கு பசுவின் கோமியத்தை தினமும் குடிப்பதாகவும், அதனால் தான் தொற்று பாதிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். மேலும், மற்றவர்களையும் பசுவின் கோமியத்தை குடிக்க பரிந்துரை செய்தார். அதேபோல், மத்திய பிரதேச பாஜக பெண் அமைச்சர் ஒருவர், வீடுகளில் யாகம் செய்ய வேண்டும் என்றும், உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ ஒருவர் கோமியம் குடிக்க வேண்டும் என்றும் கூறினர். அறிவியல் ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படாத விஷயங்களை பாஜக தலைவர்கள் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருவதால், மக்கள் மத்தியில் தேவையற்ற குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. ஏற்கனவே கொரோனா அச்சத்தில் இருக்கும் மக்கள், தற்போது இவர்கள் செயல்களை பார்த்து அதிர்ச்சியடைந்து வருகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் பாஜக தலைவர் கோபால் சர்மா என்பவர், பசுமாட்டின் சாணத்தை தள்ளுவண்டியில் வைத்து எரியூட்டி செல்லும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், ‘கொரோனா வைரஸை அழிக்கவும், வளிமண்டலத்தில் காற்றை சுத்திகரிக்கவும், பசுவின் சாணத்தை எரியூட்டுகிேறாம். இதன் மூலம் பல நோய்கள் குணமடையும். பசு சாணம், ேகாமியம், பால், நெய் போன்றவற்றை பயன்படுத்துவதால், கொரோனா தொற்றில் இருந்து தப்பிக்க முடியும். நாங்கள் எரிக்கும் பசுவின் சாணமானது, பசுவின் நெய், கற்பூரம், நறுமணப் பொருள்களைப் பயன்படுத்தி தயாரித்துள்ளோம். இந்த புகையானது வளிமண்டலத்தை தூய்மைப்படுத்தி, ஆக்சிஜனை அதிகரிக்கும். அதன் மூலம் வைரஸ் தொற்றும் அழியும். பொதுமக்களின் நன்மைக்காக இந்த புகையை வீதிகளில் கிளப்பி வருகிறோம்’ என்றார். வண்டியில் வைத்து பசு மாட்டு சாணத்தின் புகையை கிளிப்பிய போது, தெருக்களில் சங்கு ஊதியும், ஹனுமான் சாலிசா பாடியும் சென்றனர். இவர்களின் செயலை சிலர் கடுமையாக விமர்சனம் செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்….