சிவகங்கை,பிப்.18: சிவகங்கை அருகே பெருமாள்பட்டியில் திமுக வடக்கு ஒன்றின் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடியேற்று விழா நடந்தது. அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர் தென்னவன், வடக்கு ஒன்றிய செயலாளர் முத்துராமலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் திருமலை குமணன், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தார்.
பின்னர் திருமலை குமணனின் மகள் ஸ்டெதஸ்கோப் வழங்கினார். இதனைத் தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு விழா நினைவு கொடியினை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஏற்றி வைத்தார். இதில் மாவட்டத் துணைச் செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, நகரச் செயலாளர் துரை ஆனந்த், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் பவானி கணேசன், அயல அணி மாவட்ட தலைவர் கேப்டன் சரவணன், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் தனசேகரன், மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் திலகவதி கண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.