கறம்பக்குடி, செப். 3: கறம்பக்குடி அருகே அனுமதியின்றி விற்ற 10 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.கறம்பக்குடி அருகே சாந்தாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆசை தம்பி (35). இவர் அனுமதியின்றி மது பானம் விற்பதாக கறம்பக்குடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து ஜெயக்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது அனுமதியின்றி அம்புக்கோவில் சாலை அருகே மதுபானமட் விற்பனை செய்து கொண்டிருந்த ஒருவரை பிடித்து, அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கறம்பக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.