அவனியாபுரம்: மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் துரைப்பாண்டி மகன் கதிர்வேல் (36). இந்திய ராணுவத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் இவர் அசாமில் பணியில் இருந்தபோது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தார். அவரது உடல் விமானம் மூலம் நேற்று இரவு 9 மணியளவில் மதுரை வந்தடைந்தது. அங்கிருந்து வில்லாபுரம் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு குடும்பத்தினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து ராணுவ மரியாதையுடன் இவரது உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது….