சிவகங்கை, ஜன. 31: சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் இன்று (ஜன.31) நடைபெற இருந்த விவசாயிகள் குறை தீர் கூட்டம் பிப்.2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிவகங்கையில் மாவட்ட விவசாயிகள் குறை தீர் கூட்டம் ஜன.31 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நிர்வாக காரணங்களால் இக்கூட்டம் பிப்.2அன்று, காலை 10மணிக்கு சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடக்க உள்ளது. கலெக்டர் தலைமையில் நடக்கும் இக்கூட்டத்தில் வேளாண், தோட்டக்கலை, மின்வாரியம், குடிநீர் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இதில் மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் கலந்துகொண்டு விவசாயம் சார்ந்த குறைகளை தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.