Sunday, September 1, 2024
Home » போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றவர் திடீர் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றவர் திடீர் தற்கொலை முயற்சி: மருத்துவமனையில் அனுமதி

by Ranjith

 

காரியாபட்டி, ஜன. 9: மல்லாங்கிணற்றில் போலீஸ் விசாரணைக்கு காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட வாலிபர், காவல்நிலைய மாடியில் இருந்து கீழே குதித்து படுகாயம் அடைந்தார். இது தொடர்பாக காவல்துறை உயரதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மல்லாங்கிணற்றை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் காளீஸ்வரன் (29). இவர், நேற்று முன் தினம் இரவு 8 மணியளவில் கஞ்சா போதையில் ரோட்டில் நின்று சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக ரோந்து சென்ற போலீஸ்காரர்கள் காளீஸ்வரனை மல்லாங்கிணறு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அங்கு சென்ற காளீஸ்வரன் காவல்நிலையத்திலும் கூச்சலிட்டுள்ளார். பின்னர் திடீரென காவல்நிலைய மாடிக்குச் சென்றவர், அங்கிருந்து கீழே குதித்துள்ளார். இதில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதையடுத்து காளீஸ்வரனை விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு அவறு காவல்நிலையத்தில் விசாரணை செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

nine − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi