உடுமலை,மே 30: உடுமலை சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் வெங்காயம், பீட்ரூட், தக்காளி, கத்தரி, வெண்டை உள்ளிட்ட காய்கறிகளை அதிகமாக பயிரிட்டு வருகின்றனர். நெல், கரும்பு, சோளம் போன்றவை அதிக பரப்பளவில் பயிரிட்ட போதும், தென்னந்தோப்புகளில் ஊடுபயிராக காய்கறிகள் பயிரிடுவதும் தொடர்கிறது. கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை நன்றாக பெய்ததால் அமராவதி அணையானது தனது முழு கொள்ளளவை அடைந்தது. மேலும் பாசனத்திற்கும், குடிநீருக்கும் பஞ்சம் வராத வகையில் பருவமழை மட்டுமின்றி கோடை மழையும் விவசாயிகளுக்கு கை கொடுத்தது.