தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை சீரமைப்பு பணி நடந்து வருகிறது. தொப்பூaர் கணவாயின் வழியாக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் தினசரி பல ஆயிரகணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்த சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு, தொப்பூர் இரட்டை பாலம் அருகே 2 லாரிகள், 3 கார்கள் அடுத்தடுத்து மோதி ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், 4 பேர் உடல் கருகி பலியாகினர். 4 மாத கைக்குழந்தை, 4 டிரைவர்கள் உள்பட 8பேர் காயம் அடைந்தனர். இதில், ஒருலாரி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கீழே விழுந்து நொறுங்கியது. இதையடுத்து, இப்பகுதியில் நிகழும் விபத்துகளை தடுக்க, இன்று (30ம் தேதி) சாலை பாதுகாப்பு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் தலைமையில் நடக்கிறது. பாலம் தடுப்பு சுவர் சீர் செய்யப்பட்டு விட்டது. சேலம்-பெங்களூரு சாலை கிரிப்பாக இருக்க, சீரமைக்கும் பணி தற்போது நடக்கிறது.