Sunday, September 1, 2024
Home » தற்கொலை செய்தவரின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு: மகன், பேரன் மீது வழக்குப்பதிவு

தற்கொலை செய்தவரின் உடல் போலீசுக்கு தெரியாமல் எரிப்பு: மகன், பேரன் மீது வழக்குப்பதிவு

by Ranjith

 

திருமங்கலம், ஜன. 1: திருமங்கலம் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட முதியவரின் உடலை, போலீசார், வருவாய்த்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் உறவினர்கள் எரித்தனர். இதையடுத்து இறந்தவரின் மகன், பேரன் உள்ளிட்ட உறவினர்கள் 5 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். திருமங்கலத்தை அடுத்த சிந்துபட்டி அருகேயுள்ள வி.கள்ளப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஒச்சாத்தேவர்(68). இவரது மனைவி பெருமாயி கடந்த ஒரு மாத்திற்கு முன்பு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

மனைவியின் மீது அதிக பாசம் வைத்திருந்த ஒச்சாத்தேவருக்கு, அவரது பிரிவு மனவிரக்தியை தந்துள்ளதாக தெரிகிறது. மேலும் இவருக்கு காலில் ஏற்பட்ட காயம் ஆறாத நிலையில் இருந்து வந்தது. இதன்படி, வேதனையில் இருந்த ஒச்சாத்தேவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் அருந்தி மயங்கினார். இதனை பார்த்த அவரது மகன் துரைபாண்டி, பேரன் மகாபிரபு ஆகியோர் ஆம்புலன்ஸ் மூலமாக இவரை மீட்டு உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

இதனை தொடர்ந்து ஒச்சாத்தேவரின் உடலை அவரது மகன், பேரன் மற்றும் உறவினர்கள் பெரியபாண்டி, தங்கம், ராமர் ஆகியோர் போலீசாருக்கோ, வருவாயத்துறைக்கு தகவல் தெரிவிக்காமல் எரித்தனர். இது குறித்து தகவல் அறிந்த வேப்பனூத்து விஏஓ கஸ்தூரி கொடுத்த புகாரின் பேரில், சிந்துபட்டி போலீசார் உடலை எரித்த மகன், பேரன் மற்றும் உறவினர்கள் என மொத்தம் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

You may also like

Leave a Comment

five × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi