தர்மபுரி, ஜன.18: குடியரசு தினத்தையொட்டி, தர்மபுரி நகர பகுதி 6 இடங்களில் காவல்துறை சார்பில், வெடிமருந்து பிரிவு நிபுணர்கள் மோப்பநாயுடன் சோதனை நடத்தினர். வரும் 26ம்தேதி குடியரசு தினவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் இப்போதிருந்தே ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டத்தில் குடியரசு தினவிழாவையொட்டி, கடந்த 13ம்தேதி முதல் வரும் 26ம்தேதி வரை, பாதுகாப்பு மற்றும் மோப்பநாய் மற்றும் வெடிமருந்து கண்டுபிடிக்கும் நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் உத்தரவின் பேரில், தர்மபுரி நகரில் அரசு மருத்துவமனை, ரயில்நிலையம், நகர, புறநகர் பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட 6 முக்கிய இடங்களில், மோப்ப நாய் மற்றும் வெடி மருந்து நிபுணர்களைக் கொண்டு 6 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை வரும் 26ம் தேதி வரை மாவட்டம் முழுவதும் முக்கிய இடங்களில் மேற்கொள்ளப்படுகிறது. இதில், வெடி மருந்து பிரிவு சிறந்த நாய் லுபி, இதனை கையாள்பவர் முரளி, போலீஸ் எஸ்ஐ மகேந்திரன், ஏட்டு சக்திவேல் ஆகியோர் சோதனை மேற்கொண்டனர்.
தர்மபுரியில் 6 இடங்களில் வெடிகுண்டு சோதனை
previous post