ஈரோடு, மே 25: ஈரோடு மாவட்டம், புளியம்பட்டி அருகே உள்ள பரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் திவாகர் (30). இவரது மனைவி சுபஸ்ரீ (23). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
கடன் ஏற்பட்டதால் அதனை அடைக்க வேண்டி, திவாகர் மலேசியாவுக்கு வேலைக்கு சென்றிருந்தார்.ஆனாலும், கடனை அடைக்க முடியாததால் அங்கு விஷம் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.இதையடுத்து, சொந்த ஊருக்கே அவரை வரவழைத்து மருத்துவமனையில் சிகிச்சையளித்து வந்தனர்.