சிவகங்கை, ஏப். 13: சிவகங்கையில் கூடைப்பந்து வீரர், வீராங்கணை தேர்வு இன்று(ஏப்.13) நடக்க உள்ளது. சிவகங்கை மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:தமிழ்நாடு கூடைப்பந்து கழகத்தால் நடத்தப்பட உள்ள மாநில அளவிலான 18 வயதுக்கு கீழ் ஜூனியர் பிரிவு சாம்பியன்ஷிப் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கூடைப்பந்து போட்டிக்கு சிவகங்கை மாவட்ட கூடைப்பந்து கழகத்தால் வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இன்று மாலை 4மணிக்கு சிவகங்கை மாவட்ட திறந்தவெளி விளையாட்டரங்கில் உள்ள கூடைப்பந்து மைதானத்தில் தேர்வு நடக்க உள்ளது. வயது வரம்பு 01.01.2006க்கு பிறகு பிறந்தவர்களாக இருக்க வேண்டும். பிறப்பு சான்று, பள்ளி, கல்லூரியில் படிப்பதற்கான சான்று, 10ம் வகுப்பு மதிப்பெண் சான்று, ஆதார் அட்டை நகர் கொண்டு வர வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.