சிவகாசி, மார்ச் 28: சிவகாசி யூனியன் அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு சிவகாசி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 277 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சிவகாசி யூனியன் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அலுவலகத்தில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் (இ.வி.எம்), வி.வி.பேட், கட்டுப்பாட்டு இயந்திரம் வைக்கப்பட்டுள்ளன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் 24 மணி நேரம் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிநவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டும் வருகின்றன.
ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள சிவகாசி யூனியன் அலுவலகத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
previous post