ஏற்காடு, ஜூன் 11: ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ஏற்காட்டில், நேற்று காலை முதல் வெயில் வாட்டி வந்த நிலையில், மாலை 5 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை கனமழையாக நீடித்தது. சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக பெய்த மழையால், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மலை பாதையில் பெய்த மழையால் சாலையின் இருபுறமும் மண் அரிப்பு ஏற்பட்டது. ஏற்காடு டவுன், நாகலூர், செம்மநத்தம், கூடலூர், முளுவி, ஒண்டிகடை, புத்தூர், கொம்மகாடு, அசம்பூர், மஞ்சகுட்டை உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது.