மேலூர், பிப். 10: மேலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. மேலூர் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா தலைமையில் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை தேவி வரவேற்றார். மாவட்ட கல்வி அலுவலர் முத்து லட்சுமி, மேலூர் நகராட்சி தலைவர் முகமது யாசின் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆண்டறிக்கையை தமிழாசிரியர் கண்மணி வாசித்தார். சிறப்பு விருந்தினராக டிஎஸ்பி ஆர்லியஸ் ரெபோனி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். மேலும் டாக்டர் பூபதி, பார்த்திபன், திருநிறை செல்வன், சுப்ரீம் லயன்ஸ் சங்க தலைவர் ராஜ்குமார், சித்ரகலா ஆகியோர் கலந்து கொண்டனர். மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.சிறந்த மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி தொகுப்புரையை ராணி பிளாரன்ஸ் ஆற்ற, நன்றியுரையை ஆங்கில பட்டதாரி ஆசிரியை தமிழ்செல்வி கூறினார்.
அரசு பள்ளியில் ஆண்டு விழா
previous post