Thursday, May 9, 2024
Home » யூ டியூப்பில் பிரபலமாக்குவதாக கூறி கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: அதிமுக நிர்வாகியின் மகன் உட்பட 7 பேர் கைது

யூ டியூப்பில் பிரபலமாக்குவதாக கூறி கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம்: அதிமுக நிர்வாகியின் மகன் உட்பட 7 பேர் கைது

by Arun Kumar

காங்கயம்: யூ டியூப்பில் பிரபலமாக்குவதாக கூறி கல்லூரி மாணவி கூட்டு பலாத்காரம் செய்த அதிமுக நிர்வாகியின் மகன் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள வீரக்குமாரசுவாமி கோயிலில் மகாசிவராத்திரியையொட்டி தேர்த்திருவிழா கடந்த 3 நாட்களாக நடைபெற்றது. திருவிழாவையொட்டி அப்பகுதியில் இசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. இக்கச்சேரியை பார்ப்பதற்காக 17 வயது பாலிடெக்னிக் கல்லூரி மாணவி தனது தாயுடன் வந்துள்ளார். கூட்டத்தில் இருந்து அந்த மாணவி திடீரென காணாமல்போனது தெரிந்தது.

இதையடுத்து மாணவியின் தாய் வெள்ளக்கோவில் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி அதிகாலை மாணவி வீட்டிற்கு வந்தார். அப்போது, தனது தாயிடம் பலர் என்னை ஒரு காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் தாய், காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இசைகச்சேரி நிகழ்ச்சி நடந்த பகுதிக்கு வந்த காமராஜர்புரத்தை சேர்ந்த பிரபாகர் (32), அவரது நண்பர் வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29) ஆகிய இருவரும் மாணவியிடம் பேச்சு கொடுத்துள்ளனர். ‘‘உன்னை யூடியூப் சேனலில் பிரபலபடுத்துகிறேன்’’ என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். பின்னர் மாணவியை ஒரு வாகனத்தில் அவர்களது அறைக்கு அழைத்து சென்று கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். திரும்பி வரும் வழியில் மூலனூர் தொட்டம்பாளையம் தினேஷ் (27), பாலசுப்பிரமணி (30), வெள்ளக்கோவில் ஏ.பி.புதூர் நவீன்குமார் (26), வெள்ளக்கோவில், மயில்ரங்கம் நந்தகுமார் (30), வெள்ளக்கோவில், பாரதிநகர் சதீஷ் (28) ஆகிய 5 பேர் வழிமறித்து மாணவியை ஒரு காரில் அழைத்து சென்றனர். அவர்களும் மாணவியை கூட்டு பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து ேநற்று முன்தினம் பிரபாகர், மணிகண்டனை இருவரையும் போலீசார் போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்கள் கொடுத்த தகவலின்பேரில் தலைமறைவாக இருந்த தினேஷ், பாலசுப்பிரமணி, நவீன்குமார், நந்தகுமார், சதீஷ் ஆகிய 5 பேரை நேற்று கைது செய்தனர். கைதான தினேஷின் தந்தை கதிர்வேல்சாமி அதிமுக கிளை செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் காங்கயம், வெள்ளக்கோவில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

thirteen − 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi