Thursday, May 9, 2024
Home » வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை காவலர்களுக்கு 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு

வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை காவலர்களுக்கு 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு

by Lakshmipathi

*இன்று 452 பேருக்கு சான்றிதழ் சரிப்பார்ப்பு நடக்கிறது

வேலூர் : வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2ம் நிலை காவலர்களுக்கு 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு நேற்று தொடங்கியது. இதில் 259 பேர் கலந்துகொண்டனர்.
தமிழகம் முழுவதும் காலியாக உள்ள 3 ஆயிரத்து 552 இரண்டாம் நிலை காவலர், தீயணைப்பாளர், சிறைக்காவலர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 295 மையங்களில் நடந்தது. மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 820 பேர் தேர்வு எழுதினர்.

66 ஆயிரத்து 908 பேர் தேர்வு எழுதவில்லை. தேர்வு எழுதியவர்களில் 98 ஆயிரத்து 226 பேர் தேர்ச்சி பெற்றனர். இதில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 912 பேர் தேர்ச்சி பெற்றனர்.
இவ்வாறு தேர்ச்சி பெற்ற 2ம் நிலை காவலர்களுக்கான முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு 460 பேருக்கு நேற்றுமுன்தினம் நடந்தது. இதில் 362 பேர் கலந்து கொண்டனர். 98 பேர் ஆப்சென்டாகினர். இவர்களில் 259 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு நேற்று 2ம் கட்ட உடற்தகுதி தேர்வு நடந்தது. இதில் 256 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிலையில் 2வது கட்ட உடற்தகுதி தேர்வு நேற்று காலை தொடங்கியது. உடல் தகுதியான கயிறு ஏறுதல், நீளம், உயரம் தாண்டுதல், 100 மீட்டர் அல்லது 400 மீட்டர் உள்ளிட்ட தேர்வு நடந்தது. இதை வேலூர் சரக டிஐஜி சரோஜ்குமார் தாகூர் முன்னிலையில், எஸ்பி மணிவண்ணன் தலைமையில் நடந்தது. இந்த தேர்வு பணியில் 93 போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் நேற்று முன்தினம் நடைபெற இருந்த 452 பேருக்கு முதல்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் உடற்தகுதி தேர்வு இன்று நடக்கிறது. இந்த தேர்வு நாளையும் நடக்கிறது.
இத்தேர்வில் வெற்றி பெற்றுபவர்களுக்கு அடுத்தகட்டமாக சான்றிதழ் உண்மை தன்மை சோதனையும், அடுத்த மருத்துவ பரிசோதனையும் நடக்க உள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

You may also like

Leave a Comment

one × two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi