சென்னை: சென்னை பல்லாவரம் மேம்பாலத்தில் இருபுறமாகவும் இன்று முதல் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ளனர். 2020ம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலத்தில் தாம்பரம் – விமான நிலையம் மார்க்கத்தில் மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்பட்டு வந்தன. மறுமார்க்கத்தில் அதிகரிக்கும் போக்குவரத்து நெருக்கடியால், தற்போது இரு புறமாகவும் வாகனப் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்பட்டு, அதற்கேற்ப பாலத்தில் தடுப்புகள் வைத்து பிரிக்கப்பட்டுள்ளது.