நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்கு பணம் வழங்கியதை மூடிமறைத்த குற்றத்திற்காக குற்றம்சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் உள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய சாட்சிகள், நீதிபதிகள் பற்றி டிரம்ப் பகிரங்க அறிக்கை வெளியிட்டு வந்தார். இதை நிறுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டும் அவர் கேட்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் டிரம்ப் கைது செய்யப்பட்டார். மேலும் அவருக்கு ரூ.7.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது டிரம்ப்புடன் அவரது மகன் எரிக் நீதிமன்ற அறையில்ஆஜரானார்.