திருவெறும்பூர் : திருச்சி அருகே ஆட்டோவில் போதை ஊசி, மாத்திரைகள் விற்றதாக தாய், மகன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.திருச்சி அருகே காட்டூர் பாப்பாகுறிச்சி கிராம நிர்வாக அலுவலர் சண்முகசுந்தரம் (32), தனது உதவியாளருடன் காட்டூர் பகுதிக்கு நேற்று வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் பள்ளி, கல்லூரி அருகே சட்டவிரோதமாக ஆட்டோவில் வைத்து போதை வஸ்துகளை விற்றுக்கொண்டிருந்தது தெரியவந்தது. இதுசம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
அதன் பேரில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து ெசன்று பார்த்தபோது அங்கு, திருச்சி வரகனேரி சந்தானபுரத்தை சேர்ந்த முகமது யூசுப் மகன் ஹசன்அலி (26) , இவரது தாய் ரமிஜாபேகம் (43), ஹசன்அலியின் தம்பி மனைவி ஆஷிகாபானு (20) ஆகிய மூன்று பேரும் அரசால் தடை செய்யப்பட்ட போதை ஊசி மற்றும் மாத்திரைகளை ஆட்டோவில் வைத்து விற்றுக் கொண்டிருந்தது தெரிய வந்தது.
ஆட்டோவில் சோத னை செய்ததில் டேபெண்டடோல் மாத்திரை 26, நைட்ரஜன் மாத்திரை 7, சிரிஞ்சு 12 , 7 செல்போன், ஒரு வாள், ஒரு அரிவாள் இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து 3 பேரையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தில் கைதான ஹசன் அலி மீது காந்திமார்க்கெட் மற்றும் அரியமங்கலம் காவல் நிலையங்களில் போதைப்பொருள் விற்றதாக 12 வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.