டெல்லி: தமிழ்நாடு மீனவர்கள் விவகாரத்தில் விரைந்து நடவடிக்கை எடுக்க கோரி ஒன்றிய இணையமைச்சரை சந்தித்து திமுக எம்.பி. டி.ஆர்.பாலு மனு அளித்துள்ளார். இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு மீனவர்கள், படகுகளை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி ஜெய்சங்கருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார்.