கூடலூர் : சுற்றுலா பயணிகளால் கூடலூர் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ரம்ஜான் பண்டிகையையொட்டி மற்றும் தொடர் விடுமுறையையொட்டி கேரள, கர்நாடக சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் ஊட்டிக்கு குவியத்தொடங்கியுள்ளனர். இதனால் கூடலூரில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.நகரில் வாகனங்கள் ஊர்ந்து சென்றதால் உள்ளூர் வாகன ஓட்டிகள் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். பகல் நேரத்தில் சிறிது குறைந்த நிலையில் மாலையில் மீண்டும் அதே நிலை ஏற்பட்டது.
கூடலூர்- ஊட்டிக்கு ஒன்றரை மணி முதல் இரண்டு மணி நேரத்தில் சென்று திரும்பிய வாகனங்கள் மூன்று முதல் நாண்கு மணி நேரத்திற்கு மேல் பயணிக்கும் நிலை ஏற்பட்டது. பழைய பேருந்து நிலையம் சிக்னல், சுங்கம் ரவுண்டனா பகுதிகளில் போலீசர் மிகுந்த எச்சரிக்கையுடன் போக்குவரத்தை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.