சென்னை: டி.என்.பி.எஸ்.சி மூலம் பல்வேறு துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப 1,253 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். உரிமையியல் நீதிபதி பதவிக்கு 237 பேர், உதவி நிலவியலாளர் பதவிக்கு 40 பேர், ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில், உதவி பொறியாளர் உள்ளிட்ட பதவிக்கு 752 பேர், உதவி புள்ளியியல் ஆய்வாளர் பதவிக்கு 190 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்று டி.என்.பி.எஸ்.சி தகவல் தெரிவித்துள்ளது.