திருவண்ணாமலை : திருவண்ணாமலையில், கள்ளச்சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நேற்று ெபாது ஏலத்தில் விடப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டத்தில், கள்ளச்சாராய வழக்குகள், எரி சாராய கடத்தல் போன்றவற்றில் பறிமுதல் செய்யப்படும் வாகனங்கள் அனைத்தும், 6 மாதங்களுக்கு ஒருமுறை பொது ஏலத்தில் விடுவது வழக்கம்.
அதன்படி, சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 95 இருசக்கர வாகனங்கள் மற்றும் 5 நான்கு சக்கர வாகனங்கள் உள்பட மொத்தம் 100 வாகனங்கள் நேற்று பொது ஏலத்தில் விடப்பட்
டது. திருவண்ணாமலை எஸ்பி அலுவலக ஆயுதப்படை வளாக மைதானத்தில் எஸ்பி கார்த்திகேயன் தலைமையில், கலால் டிஎஸ்பி ரமேஷ்ராஜ் முன்னிலையில் வாகன ஏலம் நடைபெற்றது. ஏலத்தில் பங்கேற்பவர்களிடம் ₹100 நுழைவு கட்டணமும், ₹2 ஆயிரம் முன்பணமாகவும் வசூலிக்கப்பட்டு ஏற்கனவே ரசீது வழங்கப்பட்டிருந்தது. அதன்படி, ரசீது பெற்றிருந்தவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ஏலத்தில் பங்கேற்றனர்.
அதில், பெரும்பாலானோர் இருசக்கர வாகன மெக்கானிக்குகளையும் அழைத்து வந்திருந்தனர்.இதில் 87 வாகனங்கள் ஏலம் எடுத்ததில் ₹28 லட்சம் வசூலிக்கப்பட்டது.
ஏலத்தில் எடுக்கப்பட்ட வாகனங்கள், முறைப்படி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மறுபதிவு செய்ய தேவையான ஆவணங்கள் உடனடியாக வழங்கப்பட்டது.