திருவள்ளூர்: திருவள்ளூர் ஜே என் சாலையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை மாதா சிலை திருவள்ளூர் பெரியகுப்பம் எம்ஜிஆர் நகரில் உள்ளது. இந்த சிலையின் கீழே உண்டியலை உடைக்க முயன்று முடியாததால் ஆத்திரமடைந்த திருடர்கள் மாதா சிலையின் மீது பெரிய பாறாங்கல்லை வீசி உடைத்து விட்டு சென்றுள்ளனர். இது குறித்து திருவள்ளூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடக்கிறது