திருவாரூர்: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை கொய்யா தோப்பு பகுதியில் வசிப்பவர் சப்பானா ராணி (29). கேட்ரிங் தொழில் செய்து வருகிறார். சுதந்திர தினத்தை முன்னிட்டு நேற்று 76 வகை உணவுகளை தயார் செய்தார். அந்த உணவுகளை தேசியக் கொடியின் மூவர்ணங்களில் பிரித்து காட்சிப்படுத்தினார். இதில் காவி நிறத்தில் 26 வகை உணவுகளும், வெள்ளை நிறத்தில் 23 வகை உணவுகளும், பச்சை நிறத்தில் 26 வகை உணவுகளும் தயார் செய்திருந்தார். இவற்றை தேசியக்கொடி போல அடுக்கி நடுவே ஊதா நிறத்தில் தேங்காய் பர்பி தயார் செய்து அலங்கரித்திருந்தார்.