சென்னை: இந்திய – இலங்கை கடற்பகுதியில் இருநாட்டு மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார். இந்திய – இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டம் நீண்டகாலமாக நடத்தப்படாமல் உள்ளது. இந்திய – இலங்கை கூட்டுப்பணிக்குழு கூட்டத்தை உடனே நடத்த வேண்டும். இலங்கையில் உள்ள படகுகளை மீட்க எந்தவொரு நடவடிக்கையும் ஒன்றிய அரசு இதுவரை எடுக்கவில்லை. இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்ட படகுகளை விடுவிக்க மீட்புக்குழு இலங்கை செல்ல அனுமதி தர வேண்டும் எனவும் கூறினார்.