Sunday, June 16, 2024
Home » மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு புறாக்கள் திருடியவர் மீது சிறுநீர் கழித்த கொடுமை: 6 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு புறாக்கள் திருடியவர் மீது சிறுநீர் கழித்த கொடுமை: 6 பேர் மீது வழக்கு; 3 பேர் கைது

by Neethimaan

அகமதுநகர்: மகாராஷ்டிராவில் புறாக்களை திருடியவரை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு சிறுநீர் கழித்த குற்றச்சாட்டில் 6 பேர் மீது வழக்கும், 3 பேர் கைது செய்யப்பட்டும் உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் அகமது நகரின் ஸ்ரீராம்பூர் பகுதியைச் சேர்ந்த நானா கலண்டே என்பவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு புறாக்களை திருடியதாக கூறப்படுகிறது. இதையடுத்து புறாக்களின் உரிமையாளர் மற்றும் அவரது நண்பர்கள் சிலரும் சேர்ந்து புறாக்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்ட நானா கலண்டேவை அவர்களது பகுதிக்கு வரவழைத்தனர். பின்னர் அவரது சட்டையை கழற்றி அரை நிர்வாணமாக்கி, அங்கிருந்த மரத்தில் தலைகீழாக ெதாங்கவிட்டனர். தொடர்ந்து அவரை கடுமையாக தாக்கினர். அங்குவந்த சிலர் நானா கலண்டேவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் எஸ்பி ஸ்வாதி கூறுகையில், ‘புறாக்கள் திருடியதாக சந்தேகத்தின் பேரில் நானா கலண்டேவை மரத்தில் தலைகீழாக தொங்கவிட்டு, அவரது முகத்தில் சிறுநீரை கழித்துள்ளனர். எச்சில் துப்பியுள்ளனர். அடித்தும் துன்புறுத்தி உள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். ஆனால் ஆடு, புறாக்களை திருடிய குற்றச்சாட்டின் அடிப்படையில், 4 தலித் இளைஞர்களை தலைகீழாக தொங்கவிட்டு தாக்கியதாக கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

13 − 7 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi