டெல்லி: தலைநகர் டெல்லியில் இயங்கும் மெட்ரோ ரயிலில் இளம் பெண் ஒருவர் குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகி வருகிறது. பப்பி லஹரி பாடிய ‘அசலம் ஈ இஷ்க்’ என்ற பாடலுக்கு கருப்பு நிற டாப் மற்றும் நீல நிற ஜீன்ஸ் அணிந்திருந்த அந்தப் பெண், தன்னை சுற்றிலும் நின்றிருக்கும் சக பயணிகளை பொருட்படுத்தாமல் ஆட்டம் போட்டார். தகவலறிந்த மெட்ரோ அதிகாரிகள், அந்தப் பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் விசாரணை நடத்தி எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
இதற்கு நெட்டிசன்கள் ஆதரித்தும், கண்டித்தும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே டெல்லி மெட்ரோவில் குத்தாட்டம் போடுவது, ஜோடி ஜோடியாக அமர்ந்து கொண்டு ஆபாச ெசய்கைகளை செய்வது போன்ற சம்பவங்கள் நடைபெற்று வந்தன. அதனால், மெட்ரோ ரயிலில் பாதுகாப்பு போலீசார் அனைத்து பெட்டிகளிலும் ரோந்து வந்தனர். மேலும், மெட்ரோவில் குத்தாட்டம் போடக் கூடாது என்று அதிகாரிகள் எச்சரித்திருந்தனர். இருந்தும் எச்சரிக்கைக்கு சில பயணிகள் செவிசாய்ப்பதில்லை. இவர்களால் மற்ற பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தி வருகிறது.