Saturday, May 25, 2024
Home » தமிழக பெண்கள் பிச்சை எடுக்கிறார்கள் என சர்ச்சை பேச்சு நடிகை குஷ்புவுக்கு எதிராக போராட்டம் வலுக்கிறது: உருவ பொம்மை எரித்து பெண்கள் எதிர்ப்பு

தமிழக பெண்கள் பிச்சை எடுக்கிறார்கள் என சர்ச்சை பேச்சு நடிகை குஷ்புவுக்கு எதிராக போராட்டம் வலுக்கிறது: உருவ பொம்மை எரித்து பெண்கள் எதிர்ப்பு

by Karthik Yash

சென்னை: தமிழக பெண்கள் பிச்சை எடுக்கிறார்கள் என்று நடிகை குஷ்பு பேசியதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வலுக்கிறது. தமிழ்நாடு அரசு சார்பில் குடும்ப தலைவிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பெண்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு ரூ.1000 பிச்சை போடுகிறது என்று பாஜ தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான குஷ்பு அண்மையில் பேசியிருந்தார். குஷ்புவின் இந்த பேச்சை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது. ஏராளமான பெண்கள் போராட்டத்தில் பங்கேற்று எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் குஷ்புவின் பேச்சுக்கு எதிராக தமிழகம் முழுவதும் நேற்று 3வது நாளாக போராட்டம் நடந்தது. இதில் பெண்கள், திமுக மகளிர் அணியை சார்ந்தவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது குஷ்புவின் உருவபொம்மையை எரித்தும், செருப்பால் அடித்தும் கோஷமிட்டனர். சென்னையில் வள்ளுவர் கோட்டம் அருகில் நடந்த போராட்டத்தில் திமுக மக­ளிர் தொண்­டர் அணிச் செய­லா­ளர் நாமக்­கல் ப.இராணி உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், “பாஜ மத்­திய செயற்­குழு உறுப்­பி­னர் குஷ்­பு­வுக்கு மக­ளிர் உரி­மைத்­தொகை எத்­தனை தாய்­மார்­க­ளுக்கு வீட்­டுச் செலவு, வீட்டு வாடகை, மருத்­து­வச்­ செ­லவு என்று பயன்­ப­டு­கி­றது தெரி­யுமா?. தமி­ழக மக­ளிரை இழிவுபடுத்தி பேசிய குஷ்­புவை வன்மை­யாக கண்­டிக்­கி­றோம். தமி­ழக மக­ளிர்­கள் பாரா­ளு­மன்ற தேர்­த­லிலே திமு­க­வுக்கு ஆத­ரவாக வாக்­களித்து தமி­ழ­கத்­தி­லி­ருந்து பிஜேபியை விரட்டி அடித்து பாடம் புகட்­டு­வார்­கள்” என்றனர்.

* போலீசில் புகார்
குஷ்புவுக்கு எதிராக போராட்டம் வலுத்து வரும் நிலையில், கள்ளக்குறிச்சி மற்றும் பவானி திமுக மகளிரணி சார்பில் உளுந்தூர்பேட்டை, பவானி காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதில், ‘‘தமிழ்நாடு அரசின் சிறப்பு திட்டமான கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தில் ரூ.1,000 பெறும் குடும்ப தலைவிகளை திரைப்பட நடிகையும், பாஜ நிர்வாகியுமான குஷ்பு இழிவுப்படுத்தும் வகையிலும், ஏளனமாகவும் பேசியுள்ளார். எனவே, அவர் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.

You may also like

Leave a Comment

5 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi