சென்னை: தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 40 மக்களவை தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கியது. தமிழ்நாட்டில் உள்ள 39 மக்களவைத் தொகுதிகளுக்கு 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 6.23 கோடி வாக்காளர்கள் உள்ள நிலையில், 10.92 லட்சம் பேர் முதல்முறை வாக்களிக்க உள்ளனர். 81,157 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 86,858 விவிபாட் இயந்திரங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன