சென்னை: ஆளுநர் மற்றும் அமலாகத்துறை மூலம் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு நெருக்கடி கொடுக்கிறது என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சி கூட்டத்தில் திமுக பங்கேற்பதால் ஒன்றிய அரசு பல்வேறு நெருக்கடி கொடுக்கிறது. அமைச்சர் பொன்முடியின் சட்ட ஆலோசகரான என்னை அமலாக்கத்துறை அனுமதிக்கவில்லை. அமலாக்கத்துறை தொடர்ந்த எந்த வழக்கிலும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை எனவும் கூறினார்.