Monday, May 6, 2024
Home » ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்

by Arun Kumar

டெல்லி: VVPAT எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ணக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். EVM , VVPAT எந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் எந்திரம், EVM, VVPAT ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும். தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்மந்தப்பட்ட எந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.

வாக்குப்பதிவு ஒப்புகைச் சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கில், வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாட்டில் சந்தேகம் இருப்பதால் இன்று மதியம் 2 மணிக்கு தேர்தல் கமிஷன்தொழில்நுட்ப அதிகாரி நேரில் ஆஜராகி பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பி வருகின்றன. எந்த பொத்தானை அழுத்தினாலும், குறிப்பிட்ட ஒரு சின்னத்துக்கு வாக்குகள் செல்லும் வகையில் இயந்திரத்தை மாற்றியமைக்க முடியும் என பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. ஆனால், இக்குற்றச்சாட்டுகளை தலைமை தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுத்து வருகிறது.

இதனிடையே, தேர்தல் மீது மக்களின் நம்பிக்கையை அதிகரிக்க மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் (இவிஎம்) பதிவாகும் அனைத்து வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் (விவிபேட்) முழுமையாக எண்ணி ஒப்பீடு செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, ஜனநாயக சீர்திருத்தத்துக்கான சங்கம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அதே கோரிக்கையை வலியுறுத்தி மேலும் பல மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் மீதான விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தி வருகிறது.

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைப் பயன்படுத்தி முயற்சித்து பார்த்த பல ஐரோப்பிய நாடுகள், வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி வாக்குப் பதிவு செய்யும் முறைக்கே மீண்டும் திரும்பிவிட்டன என்று மனுதாரர்கள் தரப்பில் வாதிடப்பட்டது. அப்போது நீதிபதிகள், ‘மனிதர்களின் தவறுகளால் வாக்கு எண்ணிக்கையில் ஏற்படும் சில பிழைகளைச் சரிபார்த்து சீர்செய்ய முடியும்’ என்று கூறினர்.

மேலும், இந்தியாவில் தேர்தல் என்பது மாபெரும் பணி என்று தெரிவித்த உச்ச நீதிமன்றம், இந்த முறை வீழ்ச்சி அடைவதற்கு முயற்சிக்க வேண்டாம் என்று கூறி, வாக்குப் பதிவு இயந்திரங்கள் முறை குறித்த முழு விபரங்களையும் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் தரப்பில், அனைத்து வாக்குகளையும், ஒப்புகைச் சீட்டையும் முழுமையாக எண்ணுவதால் ஏற்படும் நடைமுறை சிக்கல்கள் குறித்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவுற்ற நிலையில், வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை முழுமையாக எண்ணி ஒப்பிடக் கோரி தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பு இன்று (ஏப். 24) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

தற்போது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் சூழலில், இத்தீர்ப்பு வெளியாவது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளிப்பதற்கு முன்னதாக விவிபேட், இவிஎம் கருவிகளின் செயல்பாடுகள், வாக்குபதிவு முடிவு முடிந்தவுடன் சீல் வைக்கும் முறைகள், வாக்கு எண்ணும் போது பின்பற்றக்கூடிய தொழில்நுட்ப நடைமுறைகள் குறித்து சில சந்தேகங்களை எழுப்பியது.

அதாவது, விவிபேட் இயந்திரத்தில் இருக்கும் மைக்ரோ கன்ரோலரும், மெமரி ஜிப்பும் ஒன்றாக இணைக்கப்படுகிறதா? அது ஒரு முறை புரோகிராமா? பல முறை பயன்படுத்தக் கூடிய புரோகிராமா? பதிவு செய்யப்படும் மெமரியை மேலும் பல நாட்கள் சேகரிக்கும் வசதி இயந்திரங்களில் உள்ளதா? இவிஎம், விவிபேட், கன்ட்ரோல் யூனிட் ஆகிய மூன்றும் ஒரே நேரத்தில் சீல் வைக்கப்படுமா? வெவ்வேறு நேரத்தில் சீல் வைக்கப்படுமா? மைக்ரோ கன்ட்ரோலர் என்பது இவிஎம் இயந்திரத்தின் கட்டுப்பாட்டில் பொருத்தப்பட்டுள்ளதா? அல்லது விவிபேட்டில் பொருத்தப்பட்டுள்ளதா? வாக்குப்பதிவு இயந்திரத்தின் பதிவுகளை 30 நாட்கள் என்ற நடைமுறையில் இருந்து 45 நாட்கள் வரை பாதுகாக்க முடியுமா? போன்ற 5 கேள்விகள் உள்ளன.

எனவே தலைமை தேர்தல் ஆணையத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரி, இன்று பிற்பகல் 2 மணிக்கு நேரில் ஆஜராகி சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிமன்ற அமர்வு கேட்டுக்கொண்டது. அதையடுத்து சம்பந்தப்பட்ட தேர்தல் ஆணைய தொழில்நுட்ப அதிகாரி, ஆஜரானார்.

VVPAT எந்திரத்தில் பதிவாகும் வாக்குகளையும் எண்ணக் கோரிய வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராகி விளக்கம் அளித்து வருகின்றனர். EVM , VVPAT எந்திரம் ஆகிய இரண்டுக்கும் தனித்தனி கண்ட்ரோலர் உள்ளன. வாக்குப்பதிவு முடிந்ததும் பேலட் எந்திரம், EVM, VVPAT ஆகிய மூன்றும் சீல் வைக்கப்படும். 45 நாட்கள் இந்த தகவல்கள் பாதுகாத்து வைக்கப்படும். தேர்தல் வழக்கு தொடரப்பட்டால் சம்மந்தப்பட்ட எந்திரம் மட்டும் தனியாக பாதுகாத்து வைக்கப்படும் .

Control Unit, Ballot Unit மற்றும் VVPAT ஆகிய மூன்றும் அவற்றின் சொந்த மைக்ரோ கண்ட்ரோலரைக் கொண்டுள்ளன. இவற்றை Physical ஆக அணுக முடியாது. அனைத்து மைக்ரோ கண்ட்ரோலர்களும் ஒரு முறை நிரல்படுத்தக் கூடியவை. அவற்றை மாற்ற முடியாது என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளார்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, தீபாங்கர் தத்தா ஆகியோர் விசாரணையின்போது சில விளக்கம் கோரினர். இதைத் தொடர்ந்து 100% ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் அனைத்து சந்தேகங்களுக்கும் பதில் கிடைத்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள ஃபிளாஷ் மெமரி சின்னங்களை பதிவேற்றம் செய்ய மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்று நீதிபதி கூறியுள்ளார். ஆணையத்தின் விளக்கம், மனுதாரர் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு பின்னர் வழங்கப்படும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

You may also like

Leave a Comment

nineteen − eight =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi