டெல்லி: டெல்லியில் உள்ள யஷோபூமியில் ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்களின் உச்சி மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உள்ளிட்ட ஜி20 நாடுகளின் நாடாளுமன்ற சபாநாயகர்கள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார். இந்தியாவுடனான நட்புறவில் விரிசல் ஏற்பட்ட நிலையில், கனடா புறக்கணித்துள்ளது.