Monday, April 29, 2024
Home » கோடை உழவு கோடி நன்மை தரும் வேளாண்துறை தகவல்

கோடை உழவு கோடி நன்மை தரும் வேளாண்துறை தகவல்

by Arun Kumar

தேவாரம், ஏப்.19: கோடை கால உழவு மேற்கொள்வதன் மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்தலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். வேளாண்துறையினர் கூறுகையில், கோடை உழவு மேற்கொள்வதன் மூலம் மண்ணின் வளத்தை மேம்படுத்தி விதை அல்லது பயிர் நன்கு வளர ஏற்ற சூழ்நிலையை உருவாக்கலாம். மண்ணில் காற்றுபரிமாற்றம் ஏற்பட உதவுவதோடு மட்டுமின்றி மண்ணின் இறுக்கம் குறைக்கப்பட்டு பயிரின் வேர்கள் நன்கு வளர்ச்சிபெற உதவுகிறது. கோடை உழவு செய்வதால் நிலம் வளமாவதுடன் விதைப்பதெல்லாம் நன்றாக வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும்.

மண்ணின் அடியில் உள்ள பயிர்களை தாக்கி அழிக்கும் பூச்சிகளின் கூட்டுப்புழுக்கள் வெளியே கொண்டு வரப்பட்டு சூரிய வெப்பத்தாலும் பறவைகளாலும் அழிக்கப்படும். விவசாயிகள் தங்களது நிலத்தில் போடப்பட்ட இயற்கை எருவிலுள்ள களைவிதைகள் முற்றிலும் அழிக்கப்படுவதுடன் அவைகளும் ஏற்கனவே மண்ணிலுள்ள செயற்கை உரங்களும் மண்ணுடன் நன்கு கலந்து அவற்றின் சத்துக்கள் பயிர்களுக்கு முழுமையாக கிடைக்க வழிவகுக்கும். எனவே விவசாயிகள் தற்போது உள்ள சூழ்நிலையை பயன்படுத்தி மண்வளத்தை மேம்படுத்த பயிர் சாகுபடியில் அதிக மகசூல் பெற கோடை உழவு செய்ய வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

three − 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi