டெல்லி: செந்தில்பாலாஜி வழக்கில் தினமும் ஆதாரம் அழிக்கப்படுவதாக உச்சநீதிமன்றத்தில்
அமலாக்கத்துறை புகார் அளித்துள்ளது. சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த முறை மாறுபட்ட தீர்ப்பை உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது. செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதால் எங்களால் கடமையை செய்ய முடியவில்லை என்றும் செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றியதை எதிர்த்து அமலாக்கத்துறை தொடர்ந்த மனுவில் விசாரணை தொடங்கியது.