சென்னை: அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடத்துவதற்கு ம.ம.க. தலைவர் ஜவாஹிருல்லா கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் அமலாக்கத்துறை மூலம் மிரட்டி ஆட்சியாளர்களை பணிய வைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்கிறது. உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத் துறை மூலமாக நெருக்கடி தர பா.ஜ.க. முயற்சி செய்கிறது. அமலாக்கத் துறையை தொடர்ச்சியாக தன் கைப்பாவையாக மாற்றி இருக்கும் பாஜகவின் செயல் கண்டிக்கத்தக்கது எனவும் கூறினார்.