காரிமங்கலம், நவ.8:காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 500 மாடுகள், 750 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில், ரூ.25 லட்சத்திற்கு மாடுகளும், ரூ.35 லட்சத்திற்கு ஆடுகளும் விற்பனையானது. நாட்டுக்கோழி ரூ.4 லட்சத்திற்கு விற்பனையானது. மழை காரணமாக ஆடுகள் விற்பனை அதிகரித்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.