புதுடெல்லி: தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் கொல்லப்படுவதாக வதந்தி பரப்பிய வழக்கில் பாஜகவை சேர்ந்த பிரசாந்த் பட்டேல் உம்ராவுக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நிபந்தனை முன் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், ஜாமீன் நிபந்தனையை தளர்த்தவும், அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும் கோரி அவர் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு செய்துள்ளார். இந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.