வேலூர்: ரூ6 ஐ.எப்.எஸ். நிதி நிறுவன முக்கிய நிர்வாகியின் வீட்டில் நடந்த சோதனையில் கட்டுக்கட்டாக பணம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. வேலூரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்ட ஐ.எப்.எஸ் நிதி நிறுவனம் ரூ6 ஆயிரம் கோடி வரை முதலீடாக பெற்று மோசடி செய்ததாக கூறப்பட்டது. இதுதொடர்பாக வந்த புகார்களின் அடிப்படையில் ஐ.எப்.எஸ். நிறுவனத்தின் நிர்வாகிகளான லட்சுமிநாராயணன், ஜனார்த்தனன், ஜெகன்நாதன், குப்புராஜ், சரவணகுமார் ஆகியோர் மீது சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், ஐ.எப்.எஸ். நிறுவன மோசடி தொடர்பாக காட்பாடி வி.ஜி. ராவ் நகரில் உள்ள அந்நிறுவன முக்கிய நிர்வாகி லட்சுமி நாராயணன் வீட்டில் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பிக்கள் கபிலன், அருள், வேலூர் பொருளாதார குற்றப்பிரிவு டிஎஸ்பி கனகேசன் தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் நள்ளிரவு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஏற்கனவே சீல் வைக்கப்பட்டிருந்த இந்த வீட்டில் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் அகற்றப்பட்டு சோதனை நடந்தது. இந்த சோதனையில் நிறைய ஆவணங்கள், கட்டுக்கட்டாக ரொக்கப்பணம் ஆகியவை கைப்பற்றப்பட்டன. அதோடு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 கார்கள், 2 பைக்குகளும் கைப்பற்றப்பட்டன.