சென்னை: மதம், சனாதனம் பற்றி மக்களிடையே திணித்து சர்வாதிகார ஆட்சியை பாஜக நடத்தி வருகிறது என்று முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். பொதுமக்களுக்கு துன்பம் தரும் ஆட்சி பாஜக ஆட்சி என்றும் பொதுசிவில் சட்டத்தை ஒன்றிய அரசு கொண்டு வர துடிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்துள்ளார். ஏற்கனவே நாட்டில் 2 சட்டங்கள் இருக்கும்போது பொதுசிவில் சட்டம் எதற்கு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.