மதுரை: நியாயமான கோரிக்கை என்றால் தாசில்தார் குறிப்பிட்ட கால வரம்புக்குள் பரிசீலனை செய்ய வேண்டும். நியாயமான கோரிக்கை மனுக்களை கால வரம்பிற்குள் பரிசீலிக்க வேண்டும் என்பது தாசில்தாரின் கடமை என்று ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. சிவகங்கை மழவராயனேத்தல் கிராமத்தில் கால்வாயில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும். வரைப்படத்தின்படி அளந்து 3 மாதத்தில் உரிய நடவடிக்கை எடுக்க சிவகங்கை ஆட்சியருக்கு கோர்ட் உத்தரவு அளித்துள்ளது. நீர் கால்வாயை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக மழவராயனேத்தலை சேர்ந்த ராஜாராம் தொடர்ந்த வழக்கில் ஆணை பிறப்பித்துள்ளது.