மதுரை: சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ஜாமின் வழங்கக் கூடாது என சிபிஐ தரப்பில் தெரிவித்திருந்தது, மேலும் விசாரணை முடியும் நிலையில் உள்ளதால் இப்போது ஜாமின் வழங்கினால் விசாரணையில் பாதிப்பு ஏற்படும் எனவே இந்த உத்தரவு என நீதிபதி முரளி சங்கர் விளக்கம் அளித்தார்.