புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதி தரக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் மஞ்சுவிரட்டு போட்டிக்கு அனுமதியில்லை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்தார். புதுக்கோட்டையில் மஞ்சுவிரட்டுக்கு அனுமதி தராததால் கோவில் திருவிழாகள் நடத்தப்படாமல் உள்ளது. மஞ்சுவிரட்டு போட்டி நடத்த உத்தரவிடக் கோரிய மனுவுக்கு தமிழ்நாடு அரசு பதிலளிக்க மதுரைக்கிளை உத்தரவு அளித்துள்ளது.