புதுக்கோட்டை, ஜூலை 26: மணிப்பூர் மாநில சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து புதுக்கோட்டை தலைமை அஞ்சல் அலுவலகம் அருகே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கருப்பு பேட்ச் அணிந்து மத்திய அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முக்கிய நிர்வாகிகள். கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.