சென்னை: புதுச்சேரி ஜிப்மரில் அரைநாள் விடுமுறையை எதிர்த்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்தது. ராமர் கோயில் விழாவை ஒட்டி ஜிப்மர் மருத்துவமனைக்கு நாளை அரை நாள் விடுமுறை அறிவிப்பை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. முக்கியமான அறுவை சிகிச்சைகள் நாளை திட்டமிடப்படவில்லை என்று ஒன்றிய அரசின் வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் விளக்கம் அளித்துள்ளார். வழக்கறிஞர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் விளக்கத்தை ஏற்று வழக்கை ஐகோர்ட் முடித்து வைத்தது.